வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால்,
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்களைத் தேர்வு
செய்ய நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக கேந்திரிய வித்யாலய சங்கேதன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி ஆசிரியர் (இசை) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (அக். 4) காலை நடைபெற்றது.
இந்நிலையில், இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தெரியவந்ததையடுத்து எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் புதிய தேதி கேந்திரிய வித்யாலய அமைப்பின் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் இந்த இணையதளத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.