GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 3 அக்டோபர், 2015

ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு -சேலம் மாவட்ட போராட்ட ஆயத்தக்கூட்டம் இன்று சேலம் சௌர்ணபுரியில் நடைபெறுகிறது .வரும், 8ம் தேதி,ஆசிரியர்கள், வேலைநிறுத்த போராட்டம்

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28சங்கங்கள் சேர்ந்துஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  
ஆசிரியர்களுக்கானஆறாவது சம்பள கமிஷனின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது; பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. வரும், 8ம் தேதிதமிழகத்தில் உள்ள, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, 3.5 லட்சம் ஆசிரியர்கள்வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவாகியுள்ளது. இந்த போராட்டம்திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.
சேலம் மாவட்ட ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு போராட்ட ஆயத்தக்கூட்டம் இன்று சேலம் சௌர்ணபுரியில் நடைபெறுகிறது.இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளையும் வரும் 8 ஆம் தேதி பூட்டி முழுமையான வேலை நிறுத்தம் செய்வது குறித்து ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு - சேலம் மாவட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்தாலோசிக்க உள்ளனர்.