GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 6 அக்டோபர், 2015

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருவதில், சாத்தியமில்லாத சூழல்

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாகசெயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால்திட்டம் நடைமுறைக்கு வருவதில்சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.

பல்வேறு காரணங்களால்பள்ளிகளில் ஏற்படும் இடைநிற்றலை தவிர்க்கமாணவர்களின் ஒட்டுமொத்த விவரங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை2011ம் ஆண்டு மாநில அரசு கல்வித்துறை மூலம் அறிமுகப்படுத்தியது.
இஎம்ஐஎஸ் (பள்ளி கல்வி இணையதளம்) என்ற திட்டத்தின் கீழ்இவ்வாறு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதும் ஒன்றாகும். இதில்மாணவர்களின் பெயர்முகவரிரத்த வகைஎடைஉயரம்,தொடர்பு எண் எனஒவ்வொரு தகவல்களாக ஆண்டுதோறும் பதிவு செய்யும் பணியும் நடக்கிறது. ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும்இந்த விவரங்களை பதிவு செய்வது பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு பிரச்னையாகவே உள்ளது.
காரணம்பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகளை முடித்து செல்லும் மாணவர்களின் விவரங்களை விடுத்துமீண்டும் புதிதாக மாணவர்களின் விவரங்களை சேர்க்கும் பணிகளால்தான். தவிரவிவரங்களை பதிவு செய்ய சர்வர் எல்லா நேரத்திலும்பயன்பாட்டில் இருப்பதில்லை. சில நேரங்களில்இரவு நேரத்தில் சர்வர் பயன்பாட்டுக்கு வருகிறது.
கல்வித்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்துவதால்,வேறுவழியின்றி எந்நேரத்திலும் விவரங்களை பதிவு செய்யவே காத்திருக்க வேண்டியுள்ளது. இணையதள வசதியில்லாத பள்ளிகளின் நிலை மேலும் மோசம். அவ்வாறுள்ள பள்ளிகள்அருகிலுள்ள பள்ளிகளிலும்கம்ப்யூட்டர் சென்டர்களிலும் அணுகி இப்பணிகளை செய்கின்றனர்.
ஸ்மார்ட் கார்டு மட்டுமின்றிஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் வழிமுறைகள்மாணவர்களுக்கான புத்தக தொகுப்புகள் உட்பட அனைத்திற்குமான பதிவேற்றங்களும் நடக்கின்றன. ஸ்மார்ட் கார்டுகளில் குறிப்பிட்டிருக்கும்16 இலக்க எண்ணைக் கொண்டு அந்த இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் அறியப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தின் நோக்கம் பயனுள்ளதாக இருப்பினும்தற்போது இவை செயல்படுத்தப்படுமா என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதில்கடந்த கல்வியாண்டு முதல் புதிதாக ஆதார் எண் இணைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. பெரும்பான்மையான குழந்தைகளுக்கு,பெற்றோரின் ஆதார் அட்டையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சில நேரத்தில் குழந்தைகளின் ஆதார் எண் கட்டாயம் தேவைசில நேரத்தில் பெற்றோரின் ஆதார் எண் போதுமானதுமற்றொரு நேரத்தில் ஆதார் எண்கள் கட்டாயமில்லைஆதார் முகாம் நடத்தப்படும் என பல்வேறு அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதால்தற்போது என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு பள்ளி நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். இரண்டாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்இப்பணிகளால்பாடம் நடத்துவதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்கப்பட்ட விவரங்களேதற்போது வரை மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. இருப்பினும்இத்திட்டத்திற்கான பணிகளில் முன்னேற்றம் இல்லை. எந்நிலையில் உள்ளதென்பதற்கான அறிவிப்புகளும் இல்லாததால்திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே தெரியாமல்பள்ளி நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர்.