GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 25 டிசம்பர், 2014

குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன?T


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
இத்தேர்வில், எழுத்துத் தேர்வு முடிந்து அதில் தேர்வு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு என்பதால், அதிக ஆர்வம் இருக்கலாம். தவிரவும், ’அரைக்காசு என்றாலும் அரசு வேலை’ என்ற பழைய தமிழ் பழமொழி, எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் மனதில் நிலைத்து நிற்கிறது. இத்தேர்வு முடிவுகள் இன்னும் மூன்று மாத கால அவகாசத்தில் வெளியாகும். வழக்கப்படி உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் அடுத்த கட்டமாக அமையும். இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் உட்பட சில பதவிகள் கொண்ட இந்த குரூப் - 4 பணியாளர்களுக்கு, மாதச் சம்பளம் முதலில், 17 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பணியும் நிரந்தரமாகும். இத்தேர்வுக்கு, கல்வி அடிப்படை வரம்பு 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முன்னணி யில் இருக்கிறது. ஆகவே, பட்டதாரிகள், மற்ற தொழிற்கல்வி, கணினி கல்வி படித்த பட்டதாரி கள், அரசு வேலை என்பதால் ஆர்வமாக முயற்சித்திருக்கலாம். இத்தேர்வில், பெண்கள் ஆர்வமாக பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இனி, விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆயிரக்கணக்கானோர், கூடுதல் சதவீத மதிப்பெண் பெற்றோர் வரிசையில் இடம்பெற்று, கடைசி கட்ட பணியாளர் தேர்வு பரபரப்பாக அமையும். இன்று, அரசு நிர்வாக நடைமுறைகள் அதிகமாக மாறி, பணியாளர்கள் தங்களது பணியில் புதிய நடைமுறைகளை பின்பற்றியாக வேண்டிய நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக, உயர்மட்ட மேலதிகாரிகள் அதிக அளவில் பணி நேரத்தை செலவழித்து, கோப்பு களை முடிக்க வேண்டிய கட்டாயம் அமலாகிறது. அந்த பாதிப்பு, இவர்கள் மீது அதிகமாக இருக்கும். தமிழகத்தில் குரூப் - 4 பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் தேவை இருக்கிறது என்பதும், அதில் ஆர்வமாக பணியாற்ற, அதிக அளவு முதற்கட்ட தகுதியுள்ளவர்கள் உள்ளனர் என்பதையும் இத்தேர்வு காட்டுகிறது. இத்தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்கவில்லை. அவர்களில் பலருக்கு இப்பணியில் கிடைக்கும் மாத சம்பளத்தைவிட, தற்போது அதிகமாக இருக்கலாம் அல்லது அடுத்த பதவி உயர்வு மூலம் அதிக வேலைவாய்ப்பை பெறலாம் என்ற கண்ணோட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம். மேலும், வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு, முடிவின்றி பல ஆண்டுகள் காத்திருக்கும் நடைமுறை மாறி, எழுத்து தேர்வு, அதற்குப்பின் ஒளிவு மறைவற்ற நேரடித் தேர்வு, தகுதி அடிப்படையில் அரசு வேலை என்பது நல்ல அம்சமாகும். இத்தேர்வு முடிவுகளால், திறன்மிகுந்த பலர் அரசுப்பணியில் சேர்ந்தால், அரசு இயந்திரம் சற்று வேகமாக செயல்பட உதவிடும்.

ஜெயிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான். ஆனால், ஜெயிப்பதற்கு தேவையான முயற்சி எடுக்கிறோமா?

ஜெயிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான். ஆனால், ஜெயிப்பதற்கு தேவையான முயற்சி எடுக்கிறோமா?
‘முடிந்தவரை முயற்சிப்பது அல்ல முயற்சி‘ முடிக்கும்வரை முயற்சிப்பதே முயற்சி‘ உங்களிடமிருந்து வெளியே வாருங்கள்; நம்மில் பலர், நமக்குள்ளேயே வாழக் கற்றுள்ளோம். அதிலிருந்து வெளிவந்தால் வாழ்வில் சிறப்படையலாம், வெற்றி பெறலாம். முதலில் முயற்சி செய்யுங்கள். பிறகு, கடினமாக முயற்சி செய்யுங்கள். அதைவிட இன்னும் கடினமாக முயலுங்கள். அப்போது முயற்சியின் பயன் கூடும். கூடிக்கொண்டே போகும்... கூட்டு வட்டி எவ்வாறு அதிகமாக பெருகுகிறதோ, அதுபோல தொடர்ந்து செயல்படும் முயற்சியின் பயன்களும், அதிவிரைவில் அதிகரித்துக் கொண்டே போகும். முயலுதல் என்பது தொடர் பயணம். தொடர்ந்து பயணம் செய்தால், அதுதான் நமது வெற்றிப் பயணம். எது மகிழ்ச்சி? ‘ஒரு திறமை கூட இல்லாத மனிதன் யாரும் உண்டா?‘ இல்லை! ஒவ்வொரு மனிதனிடமும் விலைமதிக்க முடியாத வைரம் போன்ற சில திறமைகள் உள்ளன. நம் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்த வேண்டும். அதோடு நிற்காமல், அத்திறமைகளை சரியான நேரத்தில், சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். இன்றைய உலகம் ஒரே கிளர்ச்சிமயமாக இருக்கிறது. நாடுகளிடையே பிரச்சனைகள், மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள், இப்படி உலகம் முழுவதும் பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. பிரச்சனை இல்லாத உயிரினம் இருக்க முடியாது. பிரச்சனைகள்தான், நமது முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது! பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்பதில்லை. கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதுதான் மகிழ்ச்சி. தீர்வு என்ன? எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. உங்களுக்குள் என்ன இருக்கிறது? ஆராய்ந்து பாருங்கள். கல்வி என்பது ஆராய்ந்து அறியும் திறனை உங்களுக்கு கொடுக்கும். எனவே, கல்வியில் உயருங்கள். கல்வி உங்களை உயர்த்தும். உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை உணர்வுகளை எடுத்து குப்பையில் போடுங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை ஆராய்ந்து பாருங்கள். அந்த ஆற்றலைப் பெரிதாக வளருங்கள். உங்களுக்குள், தன்னம்பிக்கையும், தனித்திறமையும் அடங்கி இருந்தால், நிச்சயம் நீங்கள் மேலும் மேலும் உயருவீர்கள்! நீங்கள் விரும்பாததைப் பற்றி சிந்தித்து, ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள். தொடர் தோல்வி வந்தாலும் களங்காதீர்கள். ‘மிகவும் இருண்டு விடுகின்றபோது, நட்சத்திரங்கள் வெளிவருகின்றன. காரியத்தை செய்யுங்கள், சக்தி தானாக வரும். வானத்தில், வல்லூறுகளுடன் வட்டமிட்டுப் பறக்க ஆசைப்பட்டால், வான்கோழிகளோடு ஒட்டிக்கொண்டு இருக்காதீர்கள். உயரமாக நில்லுங்கள்... 

புதன், 24 டிசம்பர், 2014

வாஜ்பாய், மாளவியாவிற்கு பாரத ரத்னா : மத்திய அரசு கவுரவம்

வாஜ்பாய், மாளவியாவிற்கு பாரத ரத்னா




முன்னாள் பிரதமர் அடல் பீகாரி வாஜ்பாய் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் இந்து சமாஜ் இயக்க தலைவருமான மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வாஜ்பாயின் 90வது பிறந்த நாள் நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த விருதினை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
வாஜ்பாய், இரண்டு முறை பிரதமராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக சிறந்த பார்லிமென்ட்டேரியனாக பரிமளித்தவர். அரசியல் துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் பா.ஜ., தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத ரத்னா விருது பெறும் 42வது நபர் வாஜ்பாய். இவரது 90வது பிறந்த நாளை நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வாஜ்பாயை மேலும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா வழங்க, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டு வந்தது.
வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாய் மற்றும் மாளவியாவிற்கு பாரதரத்னா வழங்க ஒப்புதல் தெரிவித்தார்.
மதன் மோகன் மாளவியா, சுதந்திர போராட்ட வீரர் மட்டுமின்றி, இந்து மகாசபாவை தோற்றுவித்தவரும் ஆவார். 'மகாமன்னா' என அனைவராலும் போற்றப்பட்ட புகழ்பெற்ற கல்வியாளரும் கூட. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இருக்கும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவரும் மாளவியா தான். இதனால் ஆட்சி பொறுப்பேற்றதும் இவருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளிவித்திருந்தார். இதன்படி தற்போது மாளவியாவி்ற்குள் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் வரவேற்பு : வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாரபட்சமின்றி ஒருமித்த குரலாக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். தங்கள் குடும்பத்திற்கு கிடைத்துள்ள கவுரவம் என வாஜ்பாயின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.-பிரச்சனை பாடமொழியல்ல!


ஜி. ராமகிருஷ்ணன்
அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.மராட்டிய மாநிலத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலே, அதே மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க முன் னோடியான கோதாவரி பர்லேக்கர் ஆகியோர் எளிய குடும்பங்களின் குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நிறுவினார்கள்.மகாகவி ரவீந்திரநாத் தாகூர் துவக்கிய சாந்தி நிகேதன் கல்வி நிலையம் தற்போது இந்தியாலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் தொடங்க இந்திய பிரதர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் தொடங்க இந்திய பிரதர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள

சுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வியாழன், 11 செப்டம்பர், 2014

பாரதியின் செய்தியையும் கவித்துவத்தையும் வரும் தலைமுறைகளிடம் கொண்டுசெல்வது அவசியம்.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி இறந்த தினம். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்.

தமிழின் கவிதை மற்றும் உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி. தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை ஊட்டியவர் என பலரும் இவரை போற்றியுள்ளனர். 

இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். இவருடைய கவிதை திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்ப நாயக்கர் மன்னர் வழங்கினார். அன்றுமுதல் பாரதி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

புத்தகங்களை வாசிப்பதே வாழ்க்கையைச் சுவாசிப்பதன் அடையாளம் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் நடத்தும் மதுரை புத்தக திருவிழாவில் சனிக்கிழமை "வாசித்தலே சுவாசித்தல்' எனும் தலைப்பில் அவர் பேசியது:

சனி, 6 செப்டம்பர், 2014

ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமல், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது- பிரதமர், நரேந்திர மோடி

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறுகிறோம்; ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமல், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது, என, மாணவர்கள் மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி பேசினார்.

ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு

ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன், மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன.

சிறந்த மாணவர்களை, மேலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதை விட, சாதாரண, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, சிறந்த மாணவர்களாக உருவாக்குவதுதான், ஆசிரியரின் முக்கிய பணி

படிப்பில், சாதாரண நிலையில் உள்ள மாணவர்களையும், சிறந்தவர்களாக உருவாக்குவதுதான், ஆசிரியரின் முக்கியமான பணியாக இருக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தினார்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கற்பித்தல் என்பது வேலை அல்ல, அது வாழ்வியல் முறை”-பிரதமர் நரேந்திர மோடி

தேசிய விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர், “கற்பித்தல் என்பது வேலை அல்ல, அது வாழ்வியல் முறை” என கூறினார்.

ஆசிரியர் தினம்

நாட்டின் 2-வது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் (செப்டம்பர்-5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பான கல்விச்சேவைக்காக நாடு முழுவதும் 350 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை டெல்லியில் இன்று நடக்கிற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பிக்கிறார்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

சனி, 30 ஆகஸ்ட், 2014

வாழ்க ஜனநாயகம் - ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்குடெட்எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள் ளது.

கல்விக் கடன் வட்டியின்றி வழங்கப்படும்போதுதான், உயர் கல்வியில் அனைத்து சமூகத்தினரும் சமவாய்ப்புப் பெற முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

கல்விக் கடன் வட்டியின்றி வழங்கப்படும்போதுதான், உயர் கல்வியில் அனைத்து சமூகத்தினரும் சமவாய்ப்புப் பெற முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

மானுட மகிழ்ச்சிக்கு பயன்படுவதே உண்மையான கல்வி என அண்ணா மேலாண்மை மைய இயக்குநர் வெ.இறையன்பு கூறினார்.

மானுட மகிழ்ச்சிக்கு பயன்படுவதே உண்மையான கல்வி என அண்ணா மேலாண்மை மைய இயக்குநர் வெ.இறையன்பு கூறினார்.
 அவர் ஆற்றிய சிறப்புரை: பள்ளிகளில் பாடங்களைவிட மகிழ்வாக இருப்பதற்கு கற்றுத்தருவதே முக்கியம். நாம் எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நாம் கற்ற கல்வியாலும், பெற்ற செல்வத்தாலும் பயனேதுமில்லை.
மகிழ்வாக இருப்பதால் என்ன பயன் எனக்கேட்கலாம். மகிழ்வாக இருந்தால் மதிப்பெண் முதல் அனைத்தும் நம்மைத் தேடிவரும். படிக்கும் பள்ளியின் பெருமையை நினைத்து மாணவர்கள் தினமும் மகிழ்வுடன் வந்தால் படிக்கும் பாடமும் மனதில் தங்கும்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசளிக்கும் போது எழும் கைதட்டல்களை விட விளையாட்டில் பரிசு பெற்றவரை சிறப்பிக்கும்போது எழும் கைதட்டல்கள் அதிகமாக இருக்கும். கல்வியில் சிறந்தவர் தனக்காக படித்துள்ளார். விளையாட்டில் சிறந்தவர் பள்ளிக்காக விளையாடியுள்ளார். ஆகவே பொதுநலன் சார்ந்து செயல்படுவோர் என்றும் சிறப்படைவர். அவர்கள் தங்கள் செயல் மூலம் தானும் மகிழ்ந்து, தன்னைச் சார்ந்தோரையும் மகிழ்விப்பர்.
மகிழ்வின் வழியைக் கற்றுத்தருவதே சிறந்த கல்வி. ஆகவே மானுடம் மகிழ மாணவர்கள் பாடுபடவேண்டும்.
கற்ற கல்வியை மானுடம் மகிழ பயன்படுத்தவேண்டும். நாம் செய்யும் செயல்களை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்துச் செயல்பட்டால் அவை நம்மில் எளிதில் தங்கிவிடும். கற்கும் கல்வியைக் கூட வாழ்வோடு இணைப்பது எளிதில் மனப்பாடம் செய்ய உதவும் என்றார்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்தி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

அனைவருக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டட்டும் என்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

புதன், 27 ஆகஸ்ட், 2014

ஆர்வமும், முயற்சியுமே வெற்றிக்கு அடிப்படை

ஆர்வமும், முயற்சியுமே வெற்றிக்கு அடிப்படை என இளம் வயதில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்ற சென்னை புட் கிங் கேட்டரிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.சரத்பாபு கூறினார்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

‘டிஜிட்டல் வழிக் கல்வி தான் எதிர்காலம்’- பிரதீக் மேத்தா, இயக்குனர் (கல்விப் பிரிவு), மைக்ரோசாப்ட் இந்தியா.

எதிர்காலத்தில் பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, பாடங்கள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தான் வழங்கப்படும் என்று பலரும் நம்புகின்றனர். அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேசமயம், அதில் சில சவால்களும் உள்ளன.

நல்ல சமுதாயம் உருவாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கங்களையும் போதிப்பது அவசியம்

நல்ல சமுதாயம் உருவாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கங்களையும் போதிப்பது அவசியம் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வலியுறுத்தினார்.பிள்ளைகளைப் பெற்றோர்கள் படிக்க வைத்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். பல்வேறு காரணங்களால் இளைய சமுதாயத்தினரின் கவனம் சிதறி இறுதியில் அவர்கள் ஒழுக்கமற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவற்றைப் போக்கி மாணவர்களை நற்குணங்கள் நிறைந்தவர்களாக உருவாக்க பள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.சிந்தனைத் திறனையும், நற்பண்புகளையும் வளர்த்து ஒவ்வொருவரையும் சொந்தக் காலில் நிற்கவைப்பதாக கல்வி இருக்க வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். இதைச் செயல்படுத்த பள்ளிகள் கல்வியை மட்டுமன்றி நல்லொழுக்கங்களையும் போதிக்க வேண்டும் என்றார் .

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும் என்று தமிழக அரசின் சிறுபான்மையினர் நல ஆணையர் அ.முகமதுஅஸ்லம் கூறினார்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

டி.இ.இ.ஓ பயிற்சி முடித்தும் பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி

மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், டி.இ.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட 'மாவட்ட கல்வி அலுவலர்' அந்தஸ்தில், மாநில அளவில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சங்ககிரி அருகேயுள்ள வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமிஅண்ணாதுரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கிப்பாராட்டு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!


மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!
1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லைசத்தானஇயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறதுபதப்படுத்தப்பட்டடின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறதுஇதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2. 
நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம்பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றனதூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம்அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம்இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. 
நடங்கள்ஓடுங்கள்!தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம்இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்மனம் உற்சாகம் பெறும்ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும்மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்புபத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.


4. 
ஓய்வெடுங்கள்.பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள்ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்லகண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்துசற்று நிறுத்திமெல்ல விடுங்கள்கடினமானமிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும்அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலிஉடல் சோர்வு ஏற்படும்ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. 
சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டுசிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாதுசிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும்எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும்அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. 
மனம்விட்டுப் பேசுங்கள்
மனம் விட்டுப்பேசுங்கள்உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும்எல்லோரிடமும்எல்லா நேரமும்தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள்யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. 
உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாதுஅது தேவையில்லாததும் கூடமலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாதுஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும்சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள்மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. 
தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல்எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள்நிறுவனத்தை அல்லநிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும்ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்லநல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. 
விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள்கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார்விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. 
மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும்உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள்அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும்நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாதுஉங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள்யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள்பிரதிபலன் எதிர்பாராமல்உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !