GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும் என்று தமிழக அரசின் சிறுபான்மையினர் நல ஆணையர் அ.முகமதுஅஸ்லம் கூறினார்.

மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் காலம் மாறி இந்த காலத்துக்கேற்றவாறு நடைமுறைகளை புரிந்துகொண்டு பாடங்களை படிக்க வேண்டும். பின்னர் மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டும்.
முதலில் பாடங்களைப் படித்து நன்கு புரிந்துகொண்டு பாடம் நடத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்குப் புரிந்து தெளிவாகச் சென்றடையும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு பாடத்தை நடத்த வேண்டும். அதற்காகத்தான் ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வகுப்பறையில் உள்ள மாணவர்களின் குறைபாடுகளைக் கண்டறிந்து சிறந்த கல்வியை தருவது ஆசிரியர்களின் கடமை.
பாடத் திட்டங்கள் அடிக்கடி மாறுகிறது. ஒரு ஆசிரியரின் பணிக் காலம் முடிவதற்குள் 4 முதல் 5 முறை பாடத் திட்டங்கள் மாற வாய்ப்புள்ளது.
ஆகையால், ஆசிரியர்கள் காலத்துக்கேற்றார்போல் தங்களை மாற்றிக்கொண்டு பாடங்களை நடத்தினால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்.
பாடப் புத்தகங்களில் உள்ள கருத்துகளை மட்டும் கூறாமல் சிந்திக்கும்படி பாடம் நடத்த வேண்டும். 35 வயதுக்குள் அனைவரும் பல்வேறு சாதனைகளை செய்துவிட வேண்டும்.
படிக்கும்போது படிப்புக்கு அடிமையாக இருந்தால்தான் வாழ்நாள் முழுவதும் சுதந்திரமாகச் செயல்பட முடியும். படிக்கும்போது சுதந்திரமாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் வேறு ஒருவருக்கு அடிமையாகத்தான் வாழ முடியும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்றார்.