GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

இன்ஜினியரிங் 'கட் ஆப்' மதிப்பெண்ணை கணக்கிடும் முறை

இன்ஜினியரிங் 'கட் ஆப்' மதிப்பெண்ணை கணக்கிடும் முறையில் குழப்பம் வேண்டாம் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங்கை தமிழக உயர் கல்வித்துறை நேரடியாக நடத்த உள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.கடந்த ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின் போது பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது. 
இதன்படி கட் -ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதாவது கணிதத்தில் 200க்கு பெறும் மதிப்பெண் 100 மதிப்பெண்ணாக மாற்றி கணக்கிடப்படும். இயற்பியல் வேதியியல் பாடங்களின் 200 மதிப்பெண்கள் 50 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இறுதியில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கட் - ஆப் கணக்கிடப்படும்.அதாவது கட் ஆப் 200 மதிப்பெண்ணில் 50 சதவீதம் கணித மதிப்பெண்ணாகவும் தலா 25 சதவீதம் இயற்பியல், வேதியியலாகவும் கணக்கிடப்படும். இந்த சதவீதத்தில் இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இருக்காது என இன்ஜினியரிங் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தற்போது கணித மதிப்பெண் 100க்கு வழங்கப்பட்டுள்ளது அப்படியே எடுக்கப்படும். இயற்பியல் மற்றும் வேதியியலில் வழங்கப்பட்டுள்ள 100 மதிப்பெண் பாதியாக மாற்றப்படும். இறுதியில் 200 மதிப்பெண்களுக்கு கட் - ஆப் கணக்கிட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீட்' நுழைவு தேர்வு மே 5ம் தேதி நடத்தப்படுகிறது

நீட்' நுழைவு தேர்வுக்கு, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர முடியும்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, வரும், 5ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இறுதி கட்ட, நீட் பயிற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியாகின்றன.


பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியாகின்றன. மதிப்பெண்களை மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., வழியாக, மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச், 14 முதல், மார்ச், 29 வரை நடத்தப்பட்டது. தேர்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 12 ஆயிரத்து, 546 பள்ளிகளைச் சேர்ந்த, 4.76 லட்சம் மாணவியர் உட்பட, 9.60 லட்சம் பேர் மற்றும் 38 ஆயிரம் தனி தேர்வர்கள் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:30 மணிக்கு, தேர்வு துறையால் வெளியிடப்படுகின்றன. 

மாணவ -- மாணவியர் மற்றும் தனி தேர்வர்கள், ஏற்கனவே வழங்கிய மொபைல்போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். மேலும், www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், மதிப்பெண்ணை தெரிந்துக் கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து, மதிப்பெண்ணை பார்க்கலாம். மாவட்ட வாரியாக கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து நுாலகங்களிலும், தேர்வு முடிவை தெரிந்துக் கொள்ளலாம். அவரவர் பள்ளிகளிலும், மதிப்பெண்ணை தெரிந்துக் கொள்ளலாம். 
மதிப்பெண் சான்றிதழ்தேர்வு எழுதிய மாணவ - மாணவியருக்கு, வரும், 2ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அவரவர் படித்த பள்ளிகளில் கிடைக்கும். தனி தேர்வர்கள், வரும், 6ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டல் எப்படி?மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதுவோர், தங்கள் விடைத்தாளின் மதிப்பெண்ணை மறுகூட்டல் செய்துக்கொள்ளலாம். இதற்கு, வரும், 2ம் தேதி முதல், 4ம் தேதி மாலை, 5:45 மணி வரை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியே, விண்ணப்பிக்க வேண்டும். 
மொழி பாடங்களுக்கு தலா, 305 ரூபாய், விருப்ப மொழி பாடம் மற்றும் முக்கிய பாடங்களுக்கு தலா, 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பம் அளிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, மறுகூட்டல் முடிவை தெரிந்துக் கொள்ளலாம். மறுதேர்வுஇந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பித்து தேர்வு எழுதாதவர்களுக்கு, ஜூன், 14 முதல், 22ம் தேதி வரை, சிறப்பு தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்ப தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.