GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 11 ஜனவரி, 2019

போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையின்போது, பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 
30 கண்காணிப்புக் குழுக்கள்: சென்னையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்பட்ட பழைய பொருள்களால் ஏற்பட்ட புகை காரணமாக அன்றைய தினம் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியின் 13 மண்டலங்களில் காற்றில் துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட 100 கன மீட்டரை விட 135 கன மீட்டர் முதல் 386 கன மீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது.
எனவே, இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 13) சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ள 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். 
சென்னை மாநகரத்தின் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் வகையில் போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளும், போகிப் பண்டிகை தினத்தன்றும் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று மாதிரி சேகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.


அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு

எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்காக உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது.இதையடுத்து அந்தந்த ஒன்றியங்களில் இளையோராக இருக்கும் உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பணிமாறுதல் உத்தரவு வழங்கும் பணி நடக்கிறது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு கண்டுகொள்ளாததால், ' அங்கன்வாடி மையத்திற்கு மாற்றும் பணி உத்தரவை கையெழுத்திட்டு வாங்குவதில்லை,' என ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். இப்பயிற்சி பெற்ற பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களை நியமிக்காமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத் தக்கது. இதனால் அங்கன்வாடிமையத்திற்கு மாற்றும் ஆணையை பெறுவதில்லை என முடிவு செய்தோம், என்றார்.

ஆதார்' பதிவில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆதார்' பதிவில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், 'ஆதார்' எனப்படும், தனிப்பட்ட அடையாள அட்டையை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது.ஆதார் மையங்களில், கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழி பதிவுடன், புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டை வழங்கப்பட்டது.

அரசு மானியம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசு சலுகைகளை பெறுவதற்கு, ஆதார் பதிவு கட்டாய மாக்கப்பட்டுள்ளது.இந்த பதிவில், முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், 25 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, இந்த கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.'

கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க, 100 ரூபாயும், ஆன்லைனில், இ - கேஒய்சி எனப்படும், தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை, 'கலர் பிரின்ட்' எடுப்பதற்கு, 30 ரூபாயும் செலுத்த வேண்டும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்குகிறது.

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்குகிறது.

தற்போதைய லோக்சபாவின் பதவிகாலம் நிறைவடையவிருப்பதையடுத்து பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாத இடைவெளியில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் லோக்சபா பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்துதல்,வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், ஓட்டுச்சாவடிகளில் முன்னேற்பாடுகள், யாருக்கு ஒட்டளித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு முறையை அமல்படுத்துதல், நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின் பெறப்பட்ட அனுபவங்களை இனி வரப்போகும் பொதுத்தேர்தலில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனை நடக்கிறது.

புதன், 9 ஜனவரி, 2019

அனைத்து, 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது

அனைத்து, 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.முறையான காலமுறை சம்பளம் பெறும், 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு, 2018ல், 3,000 ரூபாயை, உச்ச வரம்பாக நிர்ணயித்து, பொங்கல் போனஸ் வழங்கப்பட்டது. அதை பின்பற்றி, இம்முறையும் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.மாத அடிப்படையில், நிலையான ஊதியம் பெற்று வந்த, முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள்; தொகுப்பூதிய பணியாளர்கள்; சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; சிறப்பு காலமுறை ஊதிய ஊராட்சி செயலர்கள்; ஒப்பந்த பணியாளர்கள்; தினக்கூலி ஊழியர்கள் ஆகியோருக்கு, சிறப்பு போனசாக, 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்படும்.தமிழக அரசு பணியில் உள்ள, 'ஏ' மற்றும், 'பி' பிரிவு அலுவலர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலை மானியக் குழு, தொழில்நுட்ப உதவிக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது. ஓய்வூதியர்களுக்கு ரூ.500'சி' மற்றும், 'டி' பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐராவதம் மகாதேவன் புத்தகங்களை, நாட்டுடமையாக்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' _ முதல்வர் பழனிசாமி

ஐராவதம் மகாதேவன் புத்தகங்களை, நாட்டுடமையாக்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், ''கல்வெட்டு ஆய்வாளர், ஐராவதம் மகாதேவன் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை நாட்டுடமையாக்கி, அவை அனைவரையும் சென்றடைய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.அதற்கு முதல்வர், ''கோரிக்கையை, அரசு பரிசீலிக்கும்,'' என்றார்.

பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய முரண்பாடு தொடர்பான அறிக்கையை, அரசு பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுக்கும்

பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய முரண்பாடு தொடர்பான அறிக்கையை, அரசு பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில், அவர் கூறியதாவது:லோக் ஆயுக்தா சட்டம், 2018ல் நிறைவேற்றப்பட்டு, நவ., 13 முதல், நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவில், தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க, தேவையான நடவடிக்கைகள் முடிந்து, விரைவில், செயல்பாட்டிற்கு வரும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். குரூப் 1, குரூப் 1 ஏ, குரூப் 1 பி, பணியிட தேர்வுகளுக்கு, தற்போதுள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., பிரிவினருக்கான வயது உச்சவரம்பு, 35ல் இருந்து, 37 ஆகவும், இதரப் பிரிவினருக்கு, தற்போதுள்ள வயது உச்சவரம்பு, 30ல் இருந்து, 32 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, பழைய ஓய்வூதிய திட்டத்தையே, நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், கோரிக்கை விடுத்தன. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தன் அறிக்கையை, நவ., 27ல், அரசிடம் சமர்ப்பித்தது. இதை பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் ஆகியோருக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, அரசு அமல்படுத்தியது. அதன்பின், ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக, ஒரு நபர் குழுவை, அரசு அமைத்தது. அந்த குழு விசாரணையை முடித்து, அரசுக்கு, 5ம் தேதி அறிக்கை அளித்தது. அதன் மீதும், அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை, எளிமையான முறையில் பராமரிக்கவும், நிதி மற்றும் மனித வள மேலாண்மையை மேம்படுத்திடவும், ஒருங்கிணைந்த திட்டத்தை அமல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், திட்டம் துவக்கி வைக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.தேர்வுகள், பிப்., 2 முதல், 24ம் தேதி வரை நடக்க உள்ளன.சென்னை தரமணி வணிக கல்வி நிறுவனத்தில், பிப்., 2, 3ல், ஆங்கில அதிவேக சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்படும். மற்ற இடங்களில், பிப்., 9ல், தமிழ் சுருக்கெழுத்து; பிப்., 10, ஆங்கில சுருக்கெழுத்து; பிப்., 11ல், கணக்கு பதிவியல் தேர்வு நடக்கும்.ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்வுகள், பிப்., 23, 24ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி நடத்தப்பட்ட தனியார் மையங்களில் படித்தவர்களுக்கு, கோவை பாரதியார் பல்கலையின் பட்ட சான்றிதழ்கள் ரத்தாகலாம்

விதிகளை மீறி நடத்தப்பட்ட தனியார் மையங்களில் படித்தவர்களுக்கு, கோவை பாரதியார் பல்கலையின் பட்ட சான்றிதழ்கள் ரத்தாகலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.கோவை பாரதியார் பல்கலை சார்பில், 300க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், வெளி மாநிலங்களில் படிப்பு மையங்கள் நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அவற்றில், பகுதி நேரமாகவும், வார இறுதியிலும் வகுப்புகள் நடத்தி, அதற்கு, 'ரெகுலர்' மாணவர்களுக்கான பட்ட சான்றிதழை, பாரதியார் பல்கலை வழங்குகிறது.கடும் எதிர்ப்புஇந்த நடவடிக்கைக்கு, பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யு.ஜி.சி., விதிப்படி, உள்கட்டமைப்பு வசதியுடனும், தரமான ஆசிரியர்களால் நடத்தப்படும், கலை, அறிவியல் கல்லுாரிகளில் மட்டுமே, ரெகுலர் பட்ட படிப்புகள் நடத்த முடியும்.மேலும், ஒவ்வொரு பல்கலையும், அந்தந்த மாநிலங்களுக்குள் மட்டுமே, படிப்பு மையம் அமைக்கலாம்.அதை, தனியாரிடம் விடக் கூடாது. 'ரெகுலர்'வகுப்புகள் நடத்தக் கூடாது; தொலைநிலை கல்வி மட்டுமே நடத்தலாம் என, கட்டுப்பாடுகள் உள்ளன. இதையும், பாரதியார் பல்கலை பின்பற்றவில்லை என்ற,குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து, தனியார் கல்லுாரிகள் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, 'இனி, தனியார் படிப்பு மையங்களை அனுமதிக்க மாட்டோம்' என, பல்கலை நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.ஆனால், பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், உயர்கல்வி செயலர் மங்கத்ராம் சர்மா தலைமையில், நவம்பர், 28ல் நடந்தது. இதில், 165 தனியார் படிப்பு மையங்களுக்கு, மீண்டும் அனுமதி அளிக்க முடிவானது.இதுகுறித்து, நமது நாளிதழில், நவ., 29ல் விரிவான செய்தி வெளியானது. உடன், கல்லுாரிகள் தரப்பில், பாரதியார் பல்கலை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிமன்றம் விசாரித்து, ஜன., 7ல், சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலை நிர்வாகிகள் நேரில் ஆஜராக உத்தர விட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்கல்வி செயலர் மங்கத்ராம் ஷர்மா, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவரை கைது செய்து ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பிரச்னை, பாரதி யார் பல்கலைக்கும், உயர்கல்வி துறையின் அலட்சியமான நிர்வாகத்துக்கும், பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பேராசிரியர்கள் முடிவுஇந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் தனியார் படிப்பு மையம் தொடர்பான, இந்தபிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.யு.ஜி.சி., விதியை மீறிய படிப்பு மையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவற்றின் வழியாக வழங்கப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்களை ரத்து செய்யவும், கவர்னருக்கும், யு.ஜி.சி.,க்கும் புகார் அனுப்ப, பேராசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.இதனால், படிப்பு மையங்களுக்கு, மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜன. 14 தமிழகம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

ஜன. 14 தமிழகம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதியன்று (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
 

திங்கள், 7 ஜனவரி, 2019

பயணிகள் அனைவரும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வந்துவிடவேண்டும்.விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறை

விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறையை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

ரெயில்வே பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் அருண் குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரயாக் ராஜ் (அலகாபாத்) நகரில் இந்த மாதம் தொடங்கும் கும்பமேளா விழாவையொட்டி ரெயில் நிலையத்துக்கு வருவோரிடம் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு சோதனை திட்டம் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கர்நாடக மாநிலம் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள 202 பெரிய ரெயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின்படி பயணிகள் செல்லும் ரெயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள நுழைவு வாயில் மூடப்படும்.

மற்ற இடங்களில் உள்ள நுழைவு வாயில்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கையாள்வார்கள். மேலும் தானியங்கி மூடும் கதவுகள் வழியாக குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு பயணிகள் நுழைவது தடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வந்துவிடவேண்டும். ஒவ்வொரு நுழைவு பகுதிகளிலும் பயணிகளிடம் தோராய முறையில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும்.

2016-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை 202 ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள், நுழைவு கட்டுப்பாடு, பயணிகள் மற்றும் உடைமைகள் சோதனை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் போன்றவை அடங்கும். மேலும், பயணிகள் நுழைவு வாயில்கள் வழியாக வருவது முதல் அவர்கள் ரெயில்களில் ஏறும் வரை கண்காணிக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.385 கோடி செலவு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில் நிலைய வளாகத்துக்குள் பயணிகள் நுழையும்போதே இந்த சோதனை நடத்தப்பட்டுவிட்டால் பயணிகள் அதிகம் கூடும் நேரங்களில் ஏற்படும் நெருக்கடிகள் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்காக பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே செல்லவேண்டி இருப்பது போன்ற இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ரெயில்வே நிர்வாகம் தீவிரமாக உள்ளது

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி வினியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது


பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி ஜன., 12க்குள் பொருத்த உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி வினியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசாணைவருகைப்பதிவு முறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில், பயோமெட்ரிக் கருவி பொருத்த, கடந்த அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள, 7,726 அரசு, அரசு உதவிபெறும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, ஆதாருடன் இணைந்த, தலா, இரண்டு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்படவுள்ளன.தமிழகத்தில், 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், 120 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 413 வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கும், தலா, ஒரு கருவி வீதம், 978 பயோமெட்ரிக் கருவிகள் வழங்கும் பணிகள் நடக்கின்றன.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன், இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:கூரியர்பயோமெட்ரிக் கருவி, 'கூரியர்' மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, 11ம் தேதிக்குள், வட்டார வாரியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொருத்தி, இதுகுறித்த அறிக்கையை, வரும், 12ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை ரத்து

அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை ரத்து செய்யப்படுகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒரே புத்தகத்தை படித்து, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை எழுதும் பழக்கம் இருந்தது. புத்தகங்களை சுமந்து செல்லவும், அதிக பாடங்களை படிக்கவும், மாணவர்கள் சிரமப்படுவதாகக்கூறி, சில ஆண்டுகளுக்கு முன், முப்பருவ கல்வி முறையை அரசு செயல்படுத்தியது.ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவங்களுக்கும், தனித்தனியாக புத்தகங்களை வழங்கி, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்தேர்வு முடிந்ததும், அந்தப் பருவத்திற்குரிய பாடப்புத்தகம் தேவைப்படாது. அடுத்த பருவத்திற்குரிய பாடப்புத்தகத்தை படித்தால் போதும்.ஆனால், 10ம் வகுப்பில், முப்பருவ கல்வி முறை இல்லை. ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் குறைந்த பாடங்களை படித்த மாணவர்கள், 10ம் வகுப்பில் மொத்தமாக அனைத்து பாடங்களையும் படிப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் தரமும் குறைவதாக, ஆசிரியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.இதையடுத்து, 2019 - 20ம் ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ கல்விமுறையை ரத்து செய்ய, கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை தொடரும்.

எட்டு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும், மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

எட்டு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும், மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்:தமிழகத்தில், வரும், 21ல், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் உருவாக்கப்படும். எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, மடிக்கணினி வழங்குவது குறித்து மத்திய அமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறையில், தமிழகத்தில் மாற்றங்கள் வேண்டும் என்ற முறையில், புத்தகத்தை ஏந்தி செல்லும் மாணவர்கள், எதிர்காலத்தில், மடிக்கணினியை ஏந்தி செல்லும் வரலாற்றை உருவாக்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர்,  கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறைக்காக, மிக விரைவில், 'ஸ்டுடியோ' ஒன்றும், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, தனியாக சேனல் ஒன்றும் உருவாக்கப்படும்.. அரசு பள்ளிகளில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பை துவங்க, நீதிமன்றம் அறிவுரை தெரிவித்துள்ளது. இதற்காக வரும், 21ல், சமூக நலத்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஆதார் கட்டாயம் : , 'ஸ்மார்ட்' தொழில் நுட்பம் அறிமுகம்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, 'ஸ்மார்ட்' தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், டி.என்.பி.எஸ்.சி., செயல்படுகிறது. இந்த நிறுவனம், பல்வேறு அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்துகிறது.விண்ணப்ப படிவங்களை பெற்று, தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, 'ஆன்லைன்' விண்ணப்ப முறை, சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. இந்நிலையில், இன்னும் நவீன ஸ்மார்ட் தொழில்நுட்ப முறையில், விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இந்த பணிகள், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, 'டெண்டர்' முறையில் வழங்கப்பட உள்ளன. புதிய முறைப்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும், கணினி, டேப்லெட், மொபைல் போன் வாயிலாக, ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம். அதேபோல, டி.என்.பி.எஸ்.சி., பெயரில், 'மொபைல் ஆப்'பும், தயார் செய்யப்பட உள்ளது; அதிலும், பதிவு செய்யலாம்.விண்ணப்பம் பதிவு செய்வது, கட்டணம் செலுத்துவது, கட்டண சலுகை பெறுவது, சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவு செய்வது, ஒரு முறை பதிவை மேற்கொள்வது என, அனைத்து பணிகளையும், ஆன்லைனில் தேர்வர்கள் மேற்கொள்ள முடியும். இந்தப் பதிவின் போது, அனைத்து தேர்வர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இ - மெயில், அலர்ட்' செய்திகள் அனுப்பப்படும்.மேலும், அனைத்து தேர்வர்களும், ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம். மத்திய அரசு விதிகளின் படி, ஆதார் எண்ணை வேறு பயன்பாட்டுக்கு வழங்காமல், தேர்வர்களின் விபரங்களை சரிபார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல, தேர்வர்களின் போலி விண்ணப்ப பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை கண்டுபிடிக்கவும், ஆதார் எண் பயன்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.