GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 3 ஜனவரி, 2019

ஆதார் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.மொபைல் போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன், ஆதார் எண் இணைப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு

ஆதார் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.மொபைல் போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன், ஆதார் எண் இணைப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், ஆதார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், இந்த மசோதா உள்ளதாக, காங்., - எம்.பி., சசி தரூர், திரிணமுல், காங்., - எம்.பி., சவுகதா ராய் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நடவடிக்கைசசி தரூர் கூறுகையில், ''ஆதார் சட்ட திருத்த மசோதா, எல்லா பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்படாமல் உள்ளது. தகவல் பாதுகாப்புக்கென, சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை,'' என்றார்.இதற்கு பதில் அளித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், இந்த சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்படவில்லை. வங்கி கணக்கு, மொபைல் போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது, கட்டாயம் ஆக்கப்படவில்லை.ஆதார் மசோதா, தனிநபர் ரகசிய உரிமையை மீறும் வகையில் இல்லை. தனிநபர் ரகசியம் பாதுகாக்கும் அம்சங்கள், சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.தகவல் பாதுகாப்புக்கென, தனி சட்டத்தை அரசு தயாரித்துள்ளது. அதற்கான மசோதா, விரைவில் பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்படும்.ஆதார் திட்டத்தால், பயனாளர்களின் வங்கி கணக்குகளில், நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளதை மறக்கக் கூடாது. இந்த திட்டத்தை, உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட உலக அமைப்பு கள் பாராட்டி உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்