ஐராவதம் மகாதேவன் புத்தகங்களை, நாட்டுடமையாக்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், ''கல்வெட்டு ஆய்வாளர், ஐராவதம் மகாதேவன் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை நாட்டுடமையாக்கி, அவை அனைவரையும் சென்றடைய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.அதற்கு முதல்வர், ''கோரிக்கையை, அரசு பரிசீலிக்கும்,'' என்றார்.