GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 11 ஜனவரி, 2019

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்குகிறது.

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்குகிறது.

தற்போதைய லோக்சபாவின் பதவிகாலம் நிறைவடையவிருப்பதையடுத்து பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாத இடைவெளியில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் லோக்சபா பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்துதல்,வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், ஓட்டுச்சாவடிகளில் முன்னேற்பாடுகள், யாருக்கு ஒட்டளித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு முறையை அமல்படுத்துதல், நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின் பெறப்பட்ட அனுபவங்களை இனி வரப்போகும் பொதுத்தேர்தலில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனை நடக்கிறது.