GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கற்பித்தல் என்பது வேலை அல்ல, அது வாழ்வியல் முறை”-பிரதமர் நரேந்திர மோடி

தேசிய விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர், “கற்பித்தல் என்பது வேலை அல்ல, அது வாழ்வியல் முறை” என கூறினார்.

ஆசிரியர் தினம்

நாட்டின் 2-வது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் (செப்டம்பர்-5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பான கல்விச்சேவைக்காக நாடு முழுவதும் 350 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை டெல்லியில் இன்று நடக்கிற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பிக்கிறார்.


இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, விருது பெறும் ஆசிரிய, ஆசிரியைகளுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

கற்பித்தல் என்பது ஒரு வேலை அல்ல. அது வாழ்வியல் முறை.

ஒரு ஆசிரியர் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை. எப்போதும் புதிய தலைமுறையினருக்கு கல்வி கற்றுத்தர கடுமையான முயற்சியைத்தான் எடுப்பார்.

சமுதாயம் முன்னேற...

ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால், ஆசிரியர்கள் கால நேரத்தை விட இரண்டு படிகள் வேகமாக முன்னே செல்ல வேண்டும். உலகமெங்கும் நடந்து வரும் மாற்றங்களை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய தலைமுறையினரிடம் ஆர்வத்தைக் கிளறிவிட்டு அவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்.

2 ஆசைகள்

நான் குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரி பதவி ஏற்றபோது எனக்கு 2 ஆசைகள். ஒன்று, எனது பால்ய கால நண்பர்களை சந்திக்க வேண்டும். இரண்டு, எனது ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும். இந்த இரண்டையும் நான் நிறைவேற்றி விட்டேன்.

எந்தவொரு மாணவரின் வாழ்விலும் ஆசிரியரின் பங்களிப்பு என்பது மகத்தானது.

இவ்வாறு அவர் கூறினார்.