மத்திய அரசு இளநிலைப் பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரியவருகிறது.
இதன்படி இனி திறனறிவு மற்றும் உடல் தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. நேர்முகத்தேர்வில் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டில்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை நிகழ்த்திய மோடி, பணி நியமனங்கள் பரிந்துரைகளின் படி நடக்காது எனவும், இனி தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.