நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் (பிணையம்) (39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133), வரித் தண்டலர் (22), தட்டச்சர் (1683), சுருக்கெழுத்து தட்டச்சர் (331), மற்றும் நில அளவர் (702), வரைவாளர் (53) என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டிய கடைசித் தேதி நவம்பர் 12 ஆகும். கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 14 ஆகும். தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள் உள்ளிட்ட 244 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
இளநிலை உதவியாளர் (பிணையம்) (39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133), வரித் தண்டலர் (22), தட்டச்சர் (1683), சுருக்கெழுத்து தட்டச்சர் (331), மற்றும் நில அளவர் (702), வரைவாளர் (53) என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டிய கடைசித் தேதி நவம்பர் 12 ஆகும். கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 14 ஆகும். தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள் உள்ளிட்ட 244 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்