GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

அனைத்து வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு பேரிடர் தடுப்பு இரண்டு நாள் பயிற்சி முகாம் அக்.19-இல் தொடங்க உள்ளது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள, அனைத்து வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு பேரிடர் தடுப்பு இரண்டு நாள் பயிற்சி முகாம் அக்.19-இல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) த.சீனிவாசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், பேரிடர் மேலாண்மை, பேரிடர் துயர் தணிக்கும் துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு இயற்கைச் சீற்றங்கள், எதிர்பாராத விதமாக நிகழும் விபத்துகள், ஆபத்துகளை தடுக்கவும், ஏதிர்கொள்ளவும், அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது.
இதையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி, வருகிற அக்.19, 20-ஆம் தேதிகளில் இரண்டு நாள்கள் இப் பயிற்சி முகாம் தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இம் முகாமில், பேரிடர் மேலாண்மைத் துறை நிபுணர்கள் பங்கேற்று செயல்விளக்கம் அளிக்க உள்ளனர்.
எனவே, இம் முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தொடர்புக்கு: 7373003385 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.