GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 6 அக்டோபர், 2015

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்குஅங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கும்பகோணம் பள்ளியில், 94குழந்தைகள் பலியான விபத்துக்கு பின்போதிய இடவசதி இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு, 11 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கவில்லை. 

இப்போது இடவசதியற்ற, 746 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கஅரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்குகல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்துசமூக ஆர்வலரும்,மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனருமானபாடம் நாராயணன்பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதாவுக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த, 2004ல்நீதிபதி சிட்டிபாபு கமிட்டி அறிக்கைப்படி,விதிமுறைகளைப் பின்பற்றாதஇடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்குஉள்கட்டமைப்பை சரிசெய்ய,நான்கு ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டது.
பின், 2006ல் கும்பகோணம் பள்ளி விபத்து குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிட்டி அளித்த பரிந்துரைகளையும் அரசு ஏற்றது. அதில்இடவசதி இல்லாதவிதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக்கூடாது எனகூறப்பட்டு இருந்தது.அதை ஏற்றுக்கொண்ட அரசு,உள்கட்டமைப்பு விதிமுறைகளை வகுத்ததுஇடவசதியற்ற பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இப்படிஉள்கட்டமைப்பை உயர்த்த, 11 ஆண்டுகளாக அவகாசம் அளித்து விட்டுஇப்போது பாதுகாப்பு விதிமுறைகளையும்இரண்டு நீதிபதிகளின் அறிக்கையையும் மீறிஇடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது சட்ட விரோதம். இந்த அரசு உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.