இடி, மின்னல் தாக்கத்தின்போது, மொபைலில் பேசுவது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்' என, மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. சேலம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சண்முகம் வெளியிட்ட அறிக்கை
:
நடப்பு, 2015ம் ஆண்டுக்கான பருவ மழை துவங்கியுள்ளது. மழை காலத்தில், புயல், வெள்ளம், மழையின் காரணமாக ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஈ.எல்.சி.பி., என்ற மின் கசிவு தடுப்பை, வீட்டில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்த வேண்டும். இதன் மூலம், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம். மழை பெய்யும்போது, மின் மாற்றிகள், மின் பகிர்வுப் பெட்டி, மின் கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம்.
மழையின்போதும், அதிக காற்று வீசும்போதும், அறுந்து விழுந்த மின் கம்பி அருகில் செல்ல வேண்டாம். உடனடியாக, மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின்போது வெட்ட வெளி பகுதியில் இருக்க வேண்டாம். கான்கிரீட் கட்டடத்திலோ, உலோகத்தால் மூடப்பட்ட, கார், பஸ், வேன் போன்ற வாகனத்திலோ தஞ்சமடைய வேண்டும். மரத்தின் அடியில், குடிசை வீட்டில், பஸ் நிறுத்தத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் இருந்து விலகி செல்ல வேண்டும். மின்சார தாக்குதல் இல்லாத இடத்தை தேர்வு செய்து அங்கு சென்று விட வேண்டும். இடி, மின்னலின்போது, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம். அந்த சமயத்தில், ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
:
நடப்பு, 2015ம் ஆண்டுக்கான பருவ மழை துவங்கியுள்ளது. மழை காலத்தில், புயல், வெள்ளம், மழையின் காரணமாக ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஈ.எல்.சி.பி., என்ற மின் கசிவு தடுப்பை, வீட்டில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்த வேண்டும். இதன் மூலம், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம். மழை பெய்யும்போது, மின் மாற்றிகள், மின் பகிர்வுப் பெட்டி, மின் கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம்.
மழையின்போதும், அதிக காற்று வீசும்போதும், அறுந்து விழுந்த மின் கம்பி அருகில் செல்ல வேண்டாம். உடனடியாக, மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின்போது வெட்ட வெளி பகுதியில் இருக்க வேண்டாம். கான்கிரீட் கட்டடத்திலோ, உலோகத்தால் மூடப்பட்ட, கார், பஸ், வேன் போன்ற வாகனத்திலோ தஞ்சமடைய வேண்டும். மரத்தின் அடியில், குடிசை வீட்டில், பஸ் நிறுத்தத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் இருந்து விலகி செல்ல வேண்டும். மின்சார தாக்குதல் இல்லாத இடத்தை தேர்வு செய்து அங்கு சென்று விட வேண்டும். இடி, மின்னலின்போது, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம். அந்த சமயத்தில், ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.