சென்னை அரசு பல் மருத்துவக்கல்லுாரி, 10 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது, என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியின், 19வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். 96 மாணவ, மாணவியருக்கு, பி.டி.எஸ்., பட்டங்களை வழங்கி, காதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:சுகாதார துறைக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. புதிதாக, 5,530 டாக்டர்கள், 7,240 செவிலியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அரசு பல் மருத்துவக் கல்லுாரி, ஒப்புயர்வு மையமாக அறிவிக்கப்பட்டு, 10 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, சென்னை மருத்துவக் கல்லுாரி முதல்வர் விமலா பங்கேற்றனர்.