GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 9 அக்டோபர், 2015

பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை -டாக்டர்கள் சங்கம் கண்டனம்

பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரைக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை அனுப்பியுள்ளது. 
 இது மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் மாநில அரசுகளுக்கான இடங்களை மாநில அரசுகளும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசும் தனித்தனியாக நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.