அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாயினர். 22 பேர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருமளவு பரவிவிட்டது. கல்லூரி, மற்றும் வழிபாட்டு தலைங்களில் மர்மநபர் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது வாடிக்கையாகி வருவது அந்நாட்டிற்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அங்கு போலீசார் குவிந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வரும் நிலையில், இது பயங்கரவாத தாக்குதலா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் ஓர்கான் மாகாணத்தில் சமுதாய கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
கண்மூடித்தனமாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்