GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில், எவ்வித மாற்றங்களும் இல்லாததால், அதில் சேர்ப்பதற்கான ஆர்வம் பெற்றோரிடம் குறைந்து விட்டது.
அதிக பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவக்கியும்மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதுகல்வித்துறை அலுவலர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவமாணவியர் படித்து வருகின்றனர். சமீப காலமாகதனியார் பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வியின் மீதான ஆர்வம்பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது. இதனால்அரசு பள்ளிகளில்குழந்தைகளை சேர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால்ஆண்டுக்காண்டுமாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது.

இதை தடுக்ககடந்த, 2012-13ம் ஆண்டில்அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில்,ஆங்கிலவழிக்கல்வி துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாகஅந்த ஆண்டில், 150பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி துவங்கியது. 2013-14ம் ஆண்டில்அது, 5,189 பள்ளிகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், 1.03 லட்சம் குழந்தைகள்ஆங்கில வழியில் படிப்பதாக அரசு அறிவித்தது.ஆனால்அரசு பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வி மாணவர்களும்தமிழ் வழிக்கல்வி மாணவர்களும்ஒரே வகுப்பறையில் படிக்கும் நிலைஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் நிலைஆங்கில வழிக்கல்வி ஏ.பி.எல்.கார்டு வழங்காமை உள்ளிட்டவைகளால்ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும்தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாத நிலை உள்ளது. 
ஆங்கில வழிக்கல்விக்கு தனியாக ஆசிரியர் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஏற்கனவே இருந்த உபரி ஆசிரியர்களால்அது முடியாமல் போனது. இதனால்கடந்த இரு ஆண்டுகளாகஅரசு பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வி பெரிதாகபெற்றோரை ஈர்க்கவில்லை. ஆசிரியர்கள்தங்கள் வருகை பதிவேட்டில் மட்டுமேஆங்கில வழிக்கல்வியாக பராமரித்து வருகின்றனர். 
கடந்த இரு ஆண்டுகளில் மேலும், 3,500க்கும் மேற்பட்ட பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டும்ஒரு லட்சம் மாணவர்களின் எண்ணிக்கையை தாண்டவில்லை. ஆங்கில வழிக்கான ஆசிரியர்களோகற்பித்தல் உபகரணங்களோ வழங்காத நிலையில்ஆங்கிலவழியில் மாணவர்களை சேர்க்கஆசிரியர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால்அரசு பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வியும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.