GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

சைனிக் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை சைக்னிக் பள்ளியில் 2016-17 கல்வி ஆண்டில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் மாணவர் சேர்க்க அகில இந்திய நுழைவுத் தேர்வு வரும் ஜன., 3ம் தேதி புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் முதல்வர்சைனிக் பள்ளிஅமராவதி நகர்உடுமலைப்பேட்டை வட்டம்திருப்பூர் மாவட்டம்தமிழ்நாடு-642 102. என்ற முகவரியில் நவம்பர் மாதம் 30ம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம்.
6ம் வகுப்பில் சேர 10 வயது முடிந்தும், 11 வயது முடியாமலும் அதாவது ஜூலை 2002 -லிருந்து 2003ஜூலை 1ம் தேதிக்குள் பிறந்த மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒன்பதாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சைனிக் பள்ளியில் டிச., 4ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். தேர்வாகும் மாணவர் களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். மேலும் விபரங்களுக்கு04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.