சேலம் அம்மாபேட்டையில்
உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்ட, பட்ட மேற்படிப்பு, நகை
மதிப்பீடு மற்றும் கணினி பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்நிலையத்தில், கோவை
பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.காம். (கூட்டுறவு மேலாண்மை), பி.சி.ஏ.,
பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), எம்.காம். எம்.பி.ஏ. ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்புக்கும்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வார விடுமுறை நாள்களில்
வகுப்புகள் நடைபெறும். தற்போது பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்களும்
பட்ட, பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து படித்துப் பயன் பெறலாம். இதில் மாணவர்
சேர்க்கைக்கான கடைசி நாள் அக்டோபர் 12 ஆம் தேதியாகும்.
நகை மதிப்பீடும் அதன்
நுட்பங்களும் குறித்த பகுதி நேரப் பயிற்சி அக்டோபர் 31 ஆம் தேதி
தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில்
பணிபுரிபவர்களும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலம் 2 மாதங்கள். பயிற்சிக்
கட்டணமாக மொத்தம் ரூ.3,190 பெறப்படுகிறது.
கணினி பட்டயப் பயிற்சி
புதன் மற்றும் வியாழன் ஆகிய வார நாள்களிலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார விடுமுறை
நாள்களிலும் என இரண்டு பிரிவுகளாக அக்டோபர் 28 மற்றும் 31-ஆம் தேதி
தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக் காலம் 6 மாதங்கள் ஆகும்.
கல்வித்தகுதி, 10-ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணமாக விண்ணப்ப கட்டணம்
முதல் தேர்வுக் கட்டணம் வரை சேர்த்து மொத்தம் ரூ.3,410 பெறப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு,
0427- 2240944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.