GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

 நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் ஆகியோரை திங்கள்கிழமை தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
 இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் மத்திய வெளியறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:
 இந்த மூன்று நாட்டுத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவின் நீண்டகாலக் கோரிக்கையான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைப்பதற்கு தங்களின் முழு ஆதரவையும் வழங்குவதாக மோடியிடம் அவர்கள் உறுதியளித்தனர்.
 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சமயத்தில், இந்நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு மேலும் பலம் சேர்க்கும் என்றார் ஸ்வரூப்