- ஒரு பகுதி.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாஸா விண்வெளி அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து நாஸா அமைப்பின் கோள்கள் சார் அறிவியல் துறை இயக்குநர் ஜிம் கிரீன் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செவ்வாய் கிரகமானது வறட்சியான கோள் இல்லை என்று நாங்கள் ஏற்கெனவே எண்ணி இருந்தோம். ஆராய்ச்சிக்காக நாஸா சார்பில் அனுப்பப்பட்ட விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்வாய் கிரகம் முழுவதும் நீரோட்டம் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த நீரோட்டத்தின் மூலம் பள்ளத்தாக்குகள் உருவாகியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
அதேபோல செவ்வாய் கிரகத்தில் உள்ள காற்றிலும், மண்ணிலும் எதிர்பார்த்த அளவை விடக் கூடுதலாக ஈரப்பதம் நிலவுவதும் கண்டறியப்பட்டுள்ளது என்றார் ஜிம்