தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில், இந்தக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், திட்டமிட்டபடி 3.5 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்தக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், திட்டமிட்டபடி 3.5 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என அவர்கள் தெரிவித்தனர்.