GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 23 செப்டம்பர், 2015

தரம் உயர்ந்தும் பயனில்லை

உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில்அதற்கான கூடுதல் வகுப்பறைசுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில்தாமதம் நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கைகட்டமைப்பு வசதிஆசிரியர் எண்ணிக்கை,அடிப்படை வசதிகளை ஆய்வு செய்துஅதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில்,நடுநிலைப்பள்ளிகளாக இருந்துஉயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்ந்தப்பட்டவைகளுக்குதனி வளாகம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால்பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு வசதிகள் தடைபடுகின்றன. அவ்வகையில்திருப்பூர் மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும்எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளன.
இதனால்துவக்கப்பள்ளியும்உயர்நிலை வகுப்புகளும் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. சில பள்ளி கட்டடங்கள்,பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் இருப்பதால்வகுப்பறை வசதி மேற்கொள்ளகல்வித்துறைக்கு அனுமதி கிடைப்பதில்லை. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளைகல்வித்துறை கட்டுப்பாட்டுக்கு மாற்றியமைத்தால் மட்டுமேஉரிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையே உள்ளது.