சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, "அம்மா கைப்பேசி திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்து, இப்போது 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், 92 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் உள்ளனர். அவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைக்கவும், பயிற்றுவிக்கவும் துணை புரிந்து வருகின்றனர்.
சுய உதவிக் குழுக்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு போன்ற பல்வேறு நடைமுறைகளுக்குப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது. விவரங்களைப் பதிவேடுகளில் பதிவு செய்யவும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் உருவாக்கி கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டம், "அம்மா கைப்பேசி திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு ரூ.15 கோடியில் அம்மா கைப்பேசிகள் வழங்கப்படும்.
ரூ.195 கோடியில் 4 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: கடலூர், நாகப்பட்டினம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.195.94 கோடியில் நான்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் -பரங்கிப்பேட்டை, குமராட்சி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்கள் பயன்பெற ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டமும், திருப்பூர் மாவட்டம் திருப்பூர், பல்லடம் மக்களுக்கென ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டமும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கே.சி.பாளையம், பள்ளபாளையம், காஞ்சிகோயில், நள்ளம்பட்டி, பெத்தம்பாளையம், குன்னத்தூர், ஊத்துக்குளி, சென்னிமலை, பெருந்துறை ஆகியவற்றிலுள்ள ஊரகக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டமும், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, ஆண்டிப்பட்டி ஆகிய மக்களுக்கென தனியாக ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் என மொத்தம் நான்கு குடிநீர்த் திட்டங்கள் ரூ.195.94 கோடியில் செயல்படுத்தப்படும்.
முழுக்கால் சட்டை: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்து, இப்போது 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், 92 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் உள்ளனர். அவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைக்கவும், பயிற்றுவிக்கவும் துணை புரிந்து வருகின்றனர்.
சுய உதவிக் குழுக்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு போன்ற பல்வேறு நடைமுறைகளுக்குப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது. விவரங்களைப் பதிவேடுகளில் பதிவு செய்யவும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் உருவாக்கி கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டம், "அம்மா கைப்பேசி திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு ரூ.15 கோடியில் அம்மா கைப்பேசிகள் வழங்கப்படும்.
ரூ.195 கோடியில் 4 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: கடலூர், நாகப்பட்டினம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.195.94 கோடியில் நான்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் -பரங்கிப்பேட்டை, குமராட்சி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்கள் பயன்பெற ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டமும், திருப்பூர் மாவட்டம் திருப்பூர், பல்லடம் மக்களுக்கென ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டமும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கே.சி.பாளையம், பள்ளபாளையம், காஞ்சிகோயில், நள்ளம்பட்டி, பெத்தம்பாளையம், குன்னத்தூர், ஊத்துக்குளி, சென்னிமலை, பெருந்துறை ஆகியவற்றிலுள்ள ஊரகக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டமும், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, ஆண்டிப்பட்டி ஆகிய மக்களுக்கென தனியாக ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் என மொத்தம் நான்கு குடிநீர்த் திட்டங்கள் ரூ.195.94 கோடியில் செயல்படுத்தப்படும்.
முழுக்கால் சட்டை: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.