காந்திகிராம பல்கலையில் வேலைவாய்ப்புதரும் 2 புதிய தொழிற்சார் பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டன.
பல்கலை துணைவேந்தர் நடராஜன் கூறியதாவது: காந்திகிராம பல்கலையில் புதிதாக அறிவுசார் தொழில் மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையம் மூலம் 2015-16 க்கு புதிதாக இளநிலை தொழிற் பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன. இதில் பண்ணை இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல், காலணிகள் மற்றும் துணைப்பொருட்கள் வடிவமைப்பு ஆகிய 2பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகள் பல்கலை மானியக்குழு நிதியுதவியில் துவங்கப்பட்டன. எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த படிப்பில் 6 மாதம், ஓராண்டு, 2 ஆண்டு, மூன்றாண்டு என, மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப படிக்கலாம். இதில் 60சதவீதம் செயல்திறன் பயிற்சி, 40 சதவீதம் விளக்க பாடங்கள் இருக்கும். இதில் சேர பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்கலாம், என்றார்.