டில்லி அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கிருந்த மாணவிகள் நள்ளிரவை தாண்டியும் விடுதிக்கு திரும்பாமல் வெளியில் தங்கி இருந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனையடுத்து மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பல்கலை., நிர்வாகம் விதித்துள்ளது. பல்கலை., மாணவிகள் ஜீன்ஸ் அணிவதற்கு, ஹேர்கலரிங் செய்வதற்கு, ஹீல்ஸ் அணிவதற்கு, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.