GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 17 செப்டம்பர், 2015

பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம்

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள்அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்.படிக்கதமிழக அரசுஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில்ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில்பி.எட்., -எம்.எட்.படிப்புகள் உள்ளன. மொத்தம் உள்ள, 1,777 இடங்களுக்கு, 7,400 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வரும், 28ம் தேதிமாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கி,அக்., 5ம் தேதி முடிகிறது.

பி.எட்.கல்லுாரிகளில்முதலாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தைதமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படிமுதலாம் ஆண்டு மாணவர்கள்கல்விக் கட்டணமாக, 2,070 ரூபாய் செலுத்த வேண்டும். தலித்,பழங்குடியினர் மற்றும் அருந்ததி இன மாணவர்களுக்குகட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுக்குஐந்து ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
மற்ற கட்டணங்களைதமிழக உயர்கல்வித் துறையின் உதவித்தொகை மூலம்கல்வி நிறுவனங்களே சரிசெய்து கொள்ளும். தனியார் சுயநிதி கல்லுாரிகளில்இந்தப் படிப்புக்குஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரைகட்டணம் வசூலிக்கின்றனர்.