GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 17 செப்டம்பர், 2015

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

உ.பி., மாநிலத்தில், காலியாக உள்ள, 368 பியூன் பணியிடங்களுக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 255 பேர், இன்ஜினியரிங், அறிவியல் படிப்புகளில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள்.
உ.பி.மாநிலத்தில்முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான,சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறதுஇங்குவேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ளது. சமீபத்தில்உ.பி.தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள, 368 பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்துஇந்த பணிக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இவர்களில், 255 பேர்இன்ஜினியரிங்அறிவியல்வணிகம் ஆகிய பாடங்களில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள். பல்வேறு பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்ற, 25 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இன்ஜினியரிங் பாடத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற அலோக் சவுராசியா கூறியதாவது: வேலையில்லாமல் இருப்பதை விடஏதாவது ஒரு வேலை பார்ப்பது நல்லது என்பதால்,பியூன் வேலைக்கு விண்ணப்பித்தேன். இதில்எந்த கவுரவ குறைச்சலும் இல்லை. மாதந்தோறும், 16ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும்அரசு ஊழியர்களுக்கான சலுகைகளும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். அதிகம் படித்துள்ளவர்கள்பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதுதற்போதுள்ள அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  
இதுகுறித்துஉ.பி.மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
இன்ஜினியரிங் படித்தவர்களிடம்கோப்புகளை எடுத்து வாடீ வாங்கி வா எனஉத்தரவு போட முடியாது. ஆர்வம் காரணமாக இந்த வேலைக்கு அவர்கள் விண்ணப்பித்திருந்தாலும்பணியில் சேர்ந்தபின்,தங்களுக்கு அவமதிப்பு ஏற்படுவதாகஅவர்கள் கருத வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.