GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 17 செப்டம்பர், 2015

மாணவியரிடம் மொபைல் போன்; பெற்றோரே உஷார்!

படிப்பில் முழு கவனம் செலுத்தும் வகையில்பள்ளி மாணவியர் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்கபெற்றோர் முன்வரவேண்டும்.
பள்ளிகளில் மாணவமாணவியர் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது;வகுப்பறையில் மொபைல் போன் வைத்திருந்தால்அவற்றை பறிமுதல் செய்யவகுப்பு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நலன் கருதிசில மாவட்டங்களில்மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்தினால்சஸ்பெண்ட் செய்யவும்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடலை பருவம் எனப்படும் டீன்-ஏஜ் வயதில்மாணவியர் கையில் இருக்கும் மொபைல் போன் என்பது,குழந்தையின் கையில் இருக்கும் தீப்பந்தம் போன்றது.

மொபைல் போனில் நிறைய தகவல்களைஉடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என்ற வசதி மட்டுமின்றிஆபாச காட்சிகளையும் காண முடியும். தவறான ஆண் சகவாசத்தையும் விரைவில் ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது.மொபைல் போன் "வாட்ஸ்-அப்&'பில் பரவும் ஆபாச படங்களை,புரியாத வயதில்ஆர்வக்கோளாறில் மாணவியர் பார்த்துதவறான வழியில் செல்வதற்குஅதிக வாய்ப்புள்ளது. தவறான ந(ண்)பர்களின் சகவாசத்தால்அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் ஆபத்து உள்ளது.
திருப்பூரில் உள்ள பள்ளிகளில்சில மாணவியர்ஆன்ட்ராய்டு போனை பயன்படுத்துகின்றனர். வகுப்பறையில்போனை ஸ்விட்ச்-ஆப் செய்துவிடும் அவர்கள்பள்ளி வளாகத்திலும்பஸ்களில் பயணிக்கும்போதும்மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். சில மாணவியருக்குஅவர்களது பாய் பிரண்ட்ஸ் மூலமாகஇதுபோன்ற போன்கள் பரிசாக வழங்கப்படுகிறது. இவ்விவகாரத்தில்,ஆசிரியர்களை காட்டிலும் மாணவியரின் பெற்றோரேதீவிர கவனம் செலுத்த வேண்டும். மொபைல் போன் பயன்படுத்தும் மாணவிமனம் தடுமாறினால் பள்ளியை பொருத்தவரைமாணவியின் படிப்பு மட்டுமே கெட்டுப்போகும். 
ஆனால்பெற்றோர் கவனமின்றி இருந்து விட்டால்மகளின் எதிர்காலமே சிதைந்து போகும் ஆபத்துள்ளது. இதுகுறித்துபெற்றோர்அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். டீன் -ஏஜ் வயது மாணவியரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்துபள்ளி நிர்வாகங்களும்இதுபற்றி ஆலோசனை கூட்டம் நடத்திபெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.