GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடம் தொடர்பாக முறைகேடு

 அரசு உதவி பெறும் பள்ளிகளில்ஆசிரியர் பணியிடம் தொடர்பாக முறைகேடு நடப்பதாக எழுந்துள்ள புகாரால்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் சில அரசு உதவி பெறும் பள்ளிகளில்போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாதபோதும்கூடுதல் பணியிடம் உருவாக்கிபள்ளி நிர்வாகங்கள் முறைகேடு செய்வதாககல்வித்துறைக்கு புகார் வந்தது. அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில்இது உண்மை என தெரியவந்தது. அதிக மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டிகூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதுஅலுவலக பணிகளில்குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை நியமித்துஆசிரியர்களுக்கான சம்பளத்தை பெற்றுநிதியை அபகரிப்பது போன்ற குளறுபடிகளைசில பள்ளி நிர்வாகங்கள் செய்திருப்பது தெரியவந்தது. 
இதற்குகல்வித்துறை அதிகாரிகள் சிலர்உடந்தையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து,அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்துஆலோசனை கூட்டம் நடத்தமுதன்மை கல்வி அலுவலர்களுக்குபள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்கைஅதில் அரசு ஊதியம் பெறுவோர் விவரம்பணி நியமனம் செய்யப்பட்டது எப்போதுஅனுமதி எண்அனுமதி பெற்றபோதுபள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை,தற்போதைய எண்ணிக்கைஆசிரியர் பணி நியமனத்துக்கான அரசு உத்தரவு ஒரிஜினல் சான்று ஆகியவற்றைசமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.