கிராமங்கள் மற்றும், நகரங்களில் இல்லம்தோறும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் ஜெ,. 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:
* தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழ்நாடு பைபர் நெட்வொர்க் கார்ப்பரேசன் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
* கிராமங்களில் இல்லம்தோறும் நெட் தொடர்பு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ,
* 12, 524 ஊராட்சி கிராமங்கள் இணையம் மூலம் இணைக்கப்படும் . அரசு சேவைகள் இணையம் மூலம் பெற முடியும் .
* இதற்கென ஆப்டிகல் பைபர், கிராமங்களில் பதிக்கப்படும். மத்திய அரசு உதவியுடன் 3 ஆயிரம் கோடி செலவில், மாநில அரசு நிறைவேற்றும் . அனைத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் இணைய சேவை இணைப்பு வழங்கப்படும் .
* இணையதள வழி டிவி கொண்டு வரப்படும் .
* இ - சேவை மையங்கள் வழியாக அரசு உதவி பெறும் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10 034 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 70 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் . மேலும் இணையம் மூலம் கூடுதலாக 300 சேவைகள் வழங்கப்படும் .
* புதுக்கோட்டை காது கேளாதோர் பள்ளிக்கு ஒரு கோடி செலவில் புதி கட்டடம் .
* முதுகு , தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெ., அறிவித்தார் .