GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, வெற்றி பெறும் வகையில், பிரத்யேக கணினி பயிற்சி கூடம்

 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றுவெற்றி பெறும் வகையில்பிரத்யேக கணினி பயிற்சி கூடம்உப்பிலிபாளையம்தேசிய பார்வையற்றோர் இணைய வளாகத்தில் துவங்கப்பட்டது.

மத்திய அரசின் வேலை வாய்ப்பு அறிவிப்பில்மாற்றுத்திறனாளிகளுக்குமூன்று சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதுநீண்டகாலமாக ஒதுக்கப்படாமல் இருந்ததால்மாற்றுத்திறனாளிகள் தரப்பில்சுப்ரீம் கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. கோர்ட் உத்தரவின்படி, 2008ம் ஆண்டு முதல்தற்போது வரைநிரப்பாமல் இருக்கும், 14ஆயிரத்து 267 இடங்களுக்குபோட்டித்தேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கானது.
இந்த பணியிடங்களை நிரப்பும் விதமாகதேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கானபிரத்யேக கணினி பயிற்சி கூடம் துவங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கூடத்தில்மூன்று கணினிகள்பார்வையற்றோர் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பாடப்பகுதிகளில்கருத்துகளை கேட்டறியும் வகையில்,சாதனங்கள் உள்ளன.
இம்மையத்தில் தற்போதுகோவை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்து, 35 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தங்குமிடம்உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. தேசிய பார்வையற்றோர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் கூறுகையில்நீண்டகால போராட்டம்சுப்ரீம் கோர்ட் உத்தரவால்அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொண்டுவேலை வாய்ப்பு பெறஇலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
பொது அறிவுஆங்கிலம்கணித பாடப்பகுதிகள்திறன் மேம்பாட்டு வகுப்புகளும் நடக்கின்றன. அக்., 31 வரை வகுப்பு நடக்கிறது. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 89030 01608 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்றார்.