அரசு மருத்துவ கல்லூரிகளில், மூன்று ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.
தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.எஸ்., - எம்.டி., படிப்புகளை முடித்தோருக்கான, டி.எம்.,மற்றும் எம்.சி.எச்., என்ற, மூன்று ஆண்டு உயர் சிறப்பு மருத்து படிப்புகளுக்கு, 76 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், சேர்க்கைக்கான முறையான அறிவிப்பை, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளியிட்டு உள்ளது.
இதற்கான, ஆன் லைன் வழியேயான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. ஜூலை, 1ம் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு, ஜூலை 10ம் தேதி நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.