மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையம் வெளியிட்ட அறிக்கை: சென்னை, எழும்பூரில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் இயக்குனர் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு, இந்தியாவில் உள்ள, சட்ட பல்கலை ஒன்றில் முதுகலை பட்டம், வர்த்தக சட்டத்தில் சிறப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும். மாநில, மத்திய மற்றும் பொது நிறுவனங்கள் ஒன்றில், 20 ஆண்டு சட்ட ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் வேண்டும். வேறு துறைகளில் இருந்து, இப்பதவிக்கு அயல் பணியாக வர விரும்புவோர், தங்கள் துறை மூலம், தடையில்லா சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியும், ஆர்வமும் உடையோர், ஜூலை, 15க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, www.tnerc.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கலாம்.