GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 26 ஜூன், 2016

பள்ளிகளில் மொபைல் போனுக்கு அனுமதி

பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வருவதற்கான தடை நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பள்ளிக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோல்கட்டாவில் உள்ள 3 பள்ளிகளில் மட்டும் தற்போது மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் எதிர்ப்பும்ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதனால் கோல்கட்டா வில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.
பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து வரலாம்பயன்படுத்தலாம். ஆனால் மொபைல் போனை சைலன்ட் மோடில் தான் வைத்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.aÇ