ஆன்-லைன் பதிவின்போது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலின் பதிவெண்ணை மாற்றி குறிப்பிட்ட மாணவர்களால் சென்டாக் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏற்பட உள்ளது.
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 17ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பி.டெக்., பி.பார்ம். நர்சிங்., பிசியோதெரபி, எம்.எல்.டி., மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2118 பேர் விண்ணப்பித்தனர். பின்பு, இவை இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டது.
ஆன்-லைன் பதிவின்போது, தங்களுடைய பிளஸ் 2 பதிவெண்ணை மாற்றிக் குறிப்பிட்ட மாணவர்களின் பெயர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் காரணமாக புதிய தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது. இதனால் சென்டாக் தரவரிசை பட்டியலில் சிறிது மாற்றம் இருக்கும்.