இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு: பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதனால், விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதை தடுப்பது அவசியம். மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
முதல் முறையாக படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து இந்த தவறை செய்தால், இலவச பஸ் பாசை, பள்ளி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.