மே, ஜூன் மாதங்கள் மாணவர்களுக்கானவை. பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரியில் சேர பல சான்றிதழ்கள் தேவைப்படும். இந்த நேரத்தில், சேவை கிடைக்காமல் மாணவர்கள் திணறக்கூடாது என்பதால், இ - சேவை மையங்களை, கூடுதல் நேரம் திறந்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.சேவை மையங்கள் வழக்கமாக, காலை, 10:00 முதல், மாலை, 5:45 மணி வரை செயல்படும். ஜூன் வரை, காலை, 9:30க்கு திறந்து, மாலை, 6:30 மணி வரை செயல்பட, ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளோம். இந்த நேரங்களில், மாணவர்கள் உட்பட அனைவரும், இ - சேவை மையங்களை பயன்படுத்தி, தங்கள் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்