GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 31 மே, 2019

ஓய்வூதியம் பெறுவோர் ஜூன் மாதத்திற்குள் கருவூலத்தில் நேரில் ஆஜராகி நேர்காணலை பதிவு செய்ய வேண்டும்;

ஓய்வூதியம் பெறுவோர் ஜூன் மாதத்திற்குள் கருவூலத்தில் நேரில் ஆஜராகி நேர்காணலை பதிவு செய்ய வேண்டும்; நேரில் வர இயலாதவர்கள் வாழ்வு சான்று சமர்பிக்க வேண்டும்' என அரசு அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஓய்வூதிய அலுவலகம் மாவட்ட கருவூலங்கள் சார்கருவூலங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி தங்கள் நேர்காணலை பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வு சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும்.இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் 28க்குள் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராகி நேர்காணலை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வந்தவர்கள் மீண்டும் வரத் தேவையில்லை.கருவூலங்களுக்கு செல்லாமல் அரசு இ - சேவை மையங்கள் வழியே www.jeevanpramaan.gov.in என்ற இணையதளம் வாயிலாக நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வர வேண்டும். வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, வங்கி சேமிப்பு எண் சமர்பிக்காதவர்கள் உரிய நகல்களை கருவூலத்தில் சமர்பிக்க வேண்டும்.நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட நகல்களுடன் வாழ்வு சான்றினை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். வாழ்வு சான்றினை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.வௌிநாட்டில் வசிப்போர் இந்திய துாதரக அலுவலரிடம் வாழ்வு சான்று பெற்று சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.