GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 9 மே, 2019

தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் 46 ஓட்டுச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளது

தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் 46 ஓட்டுச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் ஐந்து மாவட்டங்களில் 13 சாவடிகளுக்கு மட்டும் வரும் 19ல் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வேலுார் தொகுதி தவிர 38 லோக்சபா தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப். 18ல் நடந்தது. சூலுார், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.