தமிழக வனத்துறையில் வனவர் வனக்காப்பாளர் பணியிடங்கள் ஆன்லைன் தேர்வு வாயிலாக நிரப்பப்பப் பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 564 வனக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் முடிவு செய்தது.இதற்கான ஆன்லைன் தேர்வு கால அட்டவணை மற்றும் அறிவிப்பை மார்ச் 7ல் வெளியிட்டது. இதன்படி மே முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் பெறும் பணியை துவங்க வேண்டும். இதுவரை தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால் விண்ணப்பிக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் 'நிர்வாக காரணங்களால் வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான கால அட்டவணை ஒத்திவைக்கப்படுகிறது. திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்' என வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்து
உள்ளது.வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிவோர் வனக்காவலர்களாக பதவி உயர்வு வழங்க கோருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதே தேர்வு அறிவிப்பை ஒத்தி வைக்க காரணம் என தெரிய வந்துஉள்ளது.