GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 16 மே, 2019

அங்கீகாரம் இல்லாத பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தமிழக உயர் கல்வித் துறை

தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படு கின்றன.இந்த கல்லுாரிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின் படி, மத்திய அரசு சார்பில், அங்கீகார நீட்டிப்பு உத்தரவு வழங்கப்படும்.இந்த உத்தரவு இருந்தால் மட்டும், அந்த கல்லுாரி களில் மாணவர்களை சேர்க்க, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கும். 

இந்த ஆண்டு, பல பாலிடெக்னிக் கல்லுாரிகள், அங்கீகார நீட்டிப்பு பெறவில்லை என, தமிழக அரசுக்கு தெரிய வந்துள்ளது.இதையடுத்து, அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும், புதிய உத்தரவை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ளது.'அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின், அங்கீகார நீட்டிப்பு பெறாத கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில், முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்க்க வேண்டாம்; அதையும் மீறி சேர்த்தால், அந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்காது' என, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது