GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 18 மே, 2019

தபால் ஓட்டுகள் குறித்த முழு விபரங்களையும், இரண்டு நாட்களில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த, கே.சாந்தகுமார் தாக்கல் செய்த மனு:தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், ஓட்டளிக்க உரிமை உள்ளது.
தபால் ஓட்டு சீட்டு பெற, அதற்கான படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.தேர்தல் பயிற்சி மையத்திலேயே, தபால் ஓட்டுகளை பதிவு செய்ய தகுதியானவர்களுக்கு, படிவம் வழங்கப்படும்.அந்த படிவத்தில், தேர்தல் பணியில் இருப்பவரின் பெயர், எண், தொகுதி பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் போன்ற விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.தபால் ஓட்டு பதிவு செய்ய, எனக்கு உரிய படிவம் வழங்கப்படவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேலான, அரசு ஊழியர்களுக்கு, தபால் ஓட்டு உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக, செய்தி வந்துள்ளது.எனவே, தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, உரிய படிவங்களை வழங்கும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.வெளியிட வேண்டும்தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, தபால் ஓட்டு பதிவு செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை விபரங்களை வெளியிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர், வி.அருண், தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன்ஆஜராகினர்.தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:தேர்தல் பணியில், ௪.௩௫ லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு உரிய படிவங்கள் வழங்கப்பட்டன. ௪.௧௦ லட்சம் பேர், படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.சமர்ப்பித்ததுமொத்தம், ௩.௯௭ லட்சம் பேருக்கு, தபால் ஓட்டு சீட்டு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.இவ்வாறு, தேர்தல் ஆணைய மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு தள்ளுபடிமனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும், படிவங்கள் வழங்கப்பட்டதாக, ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்களில், நாங்கள் திருப்தி அடைகிறோம். படிவங்களைசமர்ப்பிக்காததற்கும், தவறான விபரங்களுடன் படிவங்களை சமர்ப்பித்ததற்கும், தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பல்ல.அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் பணியில் ஈடுபடும், அதிகாரிகளின் ஓட்டுப் பதிவு குறித்த விதிமுறைகள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டுள்ளது.கையேட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் கண்டிப்பாக பின்பற்றும். எனவே, இந்தகட்டத்தில், நீதிமன்றம் குறுக்கிட தேவையில்லை; மனு, தள்ளுபடிசெய்யப்படுகிறது.தபால் ஓட்டு குறித்த விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இரண்டு நாட்களில், அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்த முழுவிபரங்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.