GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 5 மே, 2019

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைக்கு, ஜூன், 21 வரை அவகாசம் உள்ளது.

கட்டடங்கள் வரன்முறை ஜூன், 21 வரை அவகாசம்


தமிழகத்தில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்காக, நகர், ஊரமைப்பு சட்டத்தில், '113 - சி' என்ற, புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி, 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை செய்யப்படும். இந்த வரன்முறை, திட்டம், 2017 ஜூன், 22ல் அமலுக்கு வந்தது.ஆறு மாதங்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பின், அடுத்தடுத்து, இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

இதன்படி, வரன்முறைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஜூன், 21ல் முடிகிறது. இதுகுறித்து, நகர், ஊரமைப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைக்கு, விண்ணப்பம் பெறுவதற்கான அவகாசம், ஜூன், 21ல் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே, நான்கு முறை நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் நீட்டிப்பு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

எனினும், இத்திட்டத்தில், இதுவரை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே, விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.