சேலம் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் தற்காலிக பயிற்றுனர் பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கலெக்டர் சம்பத் கூறியிருப்பதாவது: அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள சுருக்கெழுத்து மற்றும் செயலக பயிற்சி எனும் தொழிற்பிரிவுக்கு, தற்காலிக தொகுப்பூதிய பயிற்றுனர் பதவி நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரர் ஆங்கில சுருக்கெழுத்தில், முதுநிலை தேர்ச்சி பெற்று, 40 வயதுக்குள் இருக்க வேண்டும். முற்றிலும் தற்காலிகமான இந்த பணிக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். விரும்புவோர், தங்களை பற்றிய முழு விவரங்களுடன் ஜூலை, 15ம் தேதி மாலை, 5 மணிக்குள், முதல்வர்,அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், சேலம்-8 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 0427-2403787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.