'தமிழகத்தில், 130 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல், ஆக., 3ம் தேதி நடைபெறும்'
என, அறிவிக்கப்பட்டு உள்ளது.கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் கமிஷனர் மோகன், நேற்று கூறியதாவது: தமிழகத்தில், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை அபிவிருத்தி ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ், புதிதாக துவக்கப்பட்டுள்ள, 108 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள்; கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், ஒரு கூட்டுறவு சங்கம்; கைத்தறி மற்றும் துணிநுால் இயக்குனர் கட்டுப்பாட்டில் செயல்படும், மூன்று கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட, 130 கூட்டுறவு சங்கங்களுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சங்கங்களில், 1,199 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்
வேட்பு மனு தாக்கல் ஜூலை, 27ல் துவங்குகிறது
ஜூலை, 28ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்
ஜூலை, 29ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம்
போட்டி இருந்தால் ஓட்டுப்பதிவு ஆக., 3ல் நடைபெறும்
ஓட்டு எண்ணிக்கை ஆக., 4ல் நடைபெறும்
இதையடுத்து, 121 தலைவர் மற்றும், 119 துணைத் தலைவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்,
ஆக., 8ல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.