மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டமும் இணைந்து, நடுநிலை ஆசிரியர்களுக்கான நடப்பு கல்வியாண்டிற்கான முதல் பணியிடை பயிற்சி அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக ஒன்றியங்களில் பயிற்சி அளிக்கவுள்ள கருத்தாளர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில், படைப்பாற்றல் கல்விமுறையில் தொடர் மதிப்பீட்டில் வலுவூட்டல் பயிற்சி,புரிதலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்த, திட்டமிடல் கூட்டம், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 4ம் தேதியும், நடுநிலை ஆசிரியர்களுக்கு, 18ம் தேதியும் நடக்கிறது. மாநில அளவில் பயிற்சிகள், 5 மற்றும் 19ம் தேதியும்,மாவட்ட அளவில், 11 மற்றும் 25ம் தேதியும், குறுமைய அளவில், 16 மற்றும் 30ம் தேதி என இரண்டு பிரிவுகளாக நடக்கவுள்ளது.
மாநில அளவில் கருத்தாளர்களாக பங்கேற்கவுள்ள, விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களை பணி விடுப்பு செய்து அனுப்ப, தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.